×

14 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த இளையராஜா-கங்கை அமரன்

இளையராஜாவும், அவரது தம்பி கங்கை அமரனும் பல படங்களில் இணைந்து பணியாற்றினார்கள். 14 வருடங்களுக்கு முன்பு இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார்கள். கங்களை அமரன் தனியாக படங்களுக்கு இசை அமைத்தார். படங்களை இயக்கினார். தற்போது 20 வருடங்களுக்கு பிறகு இருவரும் மீண்டும் இணைந்திருக்கிறார்கள். இளையராஜாவின் ரிக்கார்டிங் ஸ்டூடியோவில் இந்த சந்திப்பு நடந்துள்ளது. இதற்கு இருவரின் மகன்கள் இணைந்து ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

இதுகுறித்து கங்கை அமரனின் மகன் பிரேம்ஜி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் இறைவன் அருளுக்கு நன்றி. உறவுகள் தொடர்கதை என்று குறிப்பிட்டிருக்கிறார். அண்ணன் பார்க்க வேண்டும் என்று அழைத்தார் சென்று பார்த்தேன். மகிழ்ச்சியாக இருக்கிறது. இருவரும் வேறுபாடுகளை களைந்து ஒன்றாக பயணிப்போம். அவர் என்னை பாடல் எழுதச் சொன்னால் எழுதுவோம். என்று கூறியிருக்கிறார் கங்கை அமரன்.

Tags : Yilyaraja-Ganga Amaran ,
× RELATED த கார்ஃபீல்ட் மூவி – திரைவிமர்சனம்